தஞ்சை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க நிர்வாகிகள், திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோவை நேரில் சந்தித்து, இன்சூரன்ஸ் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், இதை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவன செய்வதாக உறுதியளித்தார். சந்திப்பின்போது சங்க கோட்ட பொறுப்பாளர்கள் ஜோன்ஸ், வெங்கட்ராமன், பழனியாண்டி, சாந்தா, சேகர், பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.