தஞ்சாவூர், ஜன.18 - தஞ்சாவூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாநகராட்சி சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ், சிவகங்கை பூங்காவில் நடைபெற்று வரும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, குழந்தைகள் விளையாட்டு மைதானம், நீச்சல் குளம், நடைபாதை சீரமைக்கும் பணி, கண் காணிப்பு கேமிரா அமைக்கும் பணி, அலங்கார விளக்கு அமைக்கும் பணி போன்ற பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடித்து பொது மக்கள் பயன்பட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவ லர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாநகர செயற்பொறியாளர் சேர்மகனி, மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.