தஞ்சாவூர், பிப்.7 - தமுஎகச-வின் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கிளை சார்பில், சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கிளைத் தலைவர் வை.தம்பி அய்யா தலைமை வகித்தார். தமுஎகச மாவட்டச் செயலாளர் இரா.விஜய குமார் வாழ்த்திப் பேசினார். மாநில துணைப் பொதுச் செய லாளர் களப்பிரன் சிறப்புரையாற்றினார். ஒரத்தநாடு வட்டாட்சியர் சுந்தரச்செல்வி, போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னார். இதில் கோலப்போட்டி, கனியும் கரண்டியும், ஓட்டப் போட்டி, சாக்குப் போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.