districts

img

முத்துப்பேட்டையில் தமுஎகச முப்பெரும் விழா-கருத்தரங்கம்

மன்னார்குடி, ஜன.28 - தமுஎகச திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை கிளை சார்பாக முப்பெரும் விழா  மற்றும் கருத்தரங்கம் சனிக்கிழமை நடை பெற்றது.  கிளைச் செயலாளர் கோவி.ரெங்கசாமி தலைமை வகித்தார். ராமலிங்கம் வரவேற்க மாவட்ட துணைத் தலைவர் பாலம் செல்லத் துரை நோக்கவுரையற்றினார். மாநில துணை  பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன்,  கவிஞர் தமிழ் ஒளி குறித்து உரையாற்றி னார். தீக்கதிர் நாளிதழ் திருச்சி பதிப்பகத்தின் பொறுப்பாளர் எழுத்தாளர் ஐ.வி.நாக ராஜன், சுதந்திர போராட்ட வீரர் என்.சங்க ரய்யா குறித்து உரையாற்றினார். முத்துப் பேட்டை கவிஞர் மலிக்கா பாரூக் எழுதிய  கவிதை நூலை, கதாக அரசு தாயுமானவன் அறிமுகம் செய்தார். பின்பு, நூலை வெளி யிட்டு வாழ்த்திப் பேசினார்.  மாவட்டச் செயலாளர் ஜீ.வெங்கடேசன், தீன் முகமது ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கு.வேதரெத்தினம், கவிஞர் மா. சண்முகம், பேரா.ந.லெனின், யு.எஸ்.பொன் முடி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்டக்  குழு உறுப்பினர் பாடகி ரேணுகா பாடல் பாடி னார். கவிஞர் மலிக்கா பாரூக் ஏற்புரையாற்றி னார்.