திருவாரூர், ஏப்.24-
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை யாரின் 93 ஆம் பிறந்தநாள், பாவேந்தரின் 51-ஆம் நினைவு நாள், உலக புத்தக நாள் ஆகிய மூன்று முப்பெரும் விழா தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிட அலுவலகத்தில் நடை பெற்றது.
நிகழ்விற்கு எஸ்.காளிமுத்து தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் களப் பிரான், மாவட்டத் தலைவர் எம்.சௌந்தரராஜன், மாவட்டச் செயலாளர் ஜீ.வெங்கடேசன், ஆர்.பகவான்ராஜ், இரா.கோவிந்தராஜன், என்.அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.