திருவாரூர், பிப்.19- வலங்கைமானில் தமுஎகசவின் முப்பெரும் கலை இலக்கிய விழா நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் வலங்கைமான் கிளை சார்பாக தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்தநாள், கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு, விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யா நினைவேந்தல் ஆகிய முப்பெரும் கலை இலக்கிய விழா ஞாயிற் றுக்கிழமை திருவாரூர் மாவட்டம் வலங்கை மானில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் கோ.பால சுந்தரம் தலைமை வகித்தார். கிளைச் செயலா ளர் அந்தோணி பாஸ்கர் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஜீ.வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவர் சு.அம்பிகாபதி, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பிரேமா ஆகியோர் உரையாற்றி னார். தமிழ் தாத்தா உவேசா, ‘சமயம் கடந்த இலக்கிய ஆளுமை’ என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன், விடுதலை போராட்ட வீரர் தகைசால் தமிழர் என்.சங்கரய்யா ‘ஒரு நூற்றாண்டு சகாப்தம்’ என்ற தலைப்பில் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் வெ.ஜீவக்குமார், கவிஞர் தமிழ் ஒளி ‘வாழ்வும் தமிழும்’ என்ற தலைப்பில் திருவாரூர் மாவட்டத் தலைவர் மு.செளந்தர ராஜன் ஆகியோர் கருத்துரையாற்றினர். முன்னதாக கவிஞர் ஆதிரை, பாடகர் பிரபாகரன் ஆகியோரின் பாடல்கள், கவிதைகள் வாசிக்கப்பட்டன. பறையிசை, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.