districts

img

தமிழ் பல்கலை. - நடனப் பள்ளிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர், செப். 6 -  தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழ கத்தின், தமிழ்ப் பண்பாட்டு மையத்து டன், காரைக்குடி முத்து நடன மையம்  மற்றும் சென்னை எஸ்.கே.நாட்டியகலா நிகேதன் நடனப்பள்ளி ஆகிய இரு நிறுவனங்களும் தர வகுப்புகள் மற்றும்  சான்றிதழ், பட்டய வகுப்புகள் நடத்துவ தற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.  தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் வி.திருவள்ளுவன், பதிவாளர் (பொ) சி.தியாகராஜன், காரைக்குடி முத்து நடன மைய இயக்குநர் முத்து மாரி, இளஞ்செழியன், எஸ்.கே.நாட்டி யகலா நிகேதன் நடனப்பள்ளி இயக்கு நர் கவிதா ஆகியோர் இப்புரிந்துணர்வு  ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.  முத்து நடனப்பள்ளி, காரைக்குடி யில் நாட்டியப் பள்ளி தொடங்கி, சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இசை நடனக் கலையை கடந்த 10  ஆண்டுகளாக பயிற்றுவித்து வருகிறது.  இந்நிறுவனத்தின் புகழ்பெற்ற நடன  உருவாக்கங்களான வேலு நாச்சியார், கர்ணன், கண்ணகி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்டிய நாடகங்களை பல்வேறு இடங்களில் அரங்கேற்றி வருவதோடு, கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக இக்கலையினைப் பயிற்றுவிக்கிறது. எஸ்.கே.நாட்டியகலா நிகேதன் நடனப்பள்ளி சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில், கலைப் பயிற்சி  அளித்து வருகிறது. இந்நடன நிறுவ னத்தின் வாயிலாக குரலிசை, கருவி யிசை, பரதநாட்டியம், ஓவியம் போன்ற  பல்வேறு கலைகளை மாணவ ர்களுக்கு பயிற்றுவித்து வருகிறது. சென்னையில் உள்ள முக்கிய சபாக்களில்  பல்வேறு நாட்டிய நிகழ்வுகளை நடத்து வதும் குறிப்பிடத்தக்கது.  இந்நிகழ்வில், தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் செ.கற்பகம், கண்கா ணிப்பாளர்(பொ) மு.கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.