தஞ்சாவூர், ஜூலை 21- தமிழக அரசின் நிதி நல்கையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள, தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் கேரள மாநி லம் கொச்சின், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையம் (ICHC) தர வகுப்புகள் மற்றும் சான்றிதழ், பட்டய வகுப்புகள் நடத்து வதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையம் (ICHC) - கொச்சின் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, உலக அளவில் இந்திய கலைகளை பாதுகாத்து பரப்பி வருகிறது. இந்நிறுவனத்தின் வாயிலாக செவ்வியல் நடனம் மற்றும் இசை கற்பிக்கப்படுகிறது. இம்மையத்தின் மூலம் பாரம்பரிய கலை களுக்கான பயிற்சி வகுப்புகள் உலகெங்கிலும் நடத்தப்பட்டு இளம் கலைஞர்களை ஊக்கு விக்கும் வகையில் செயலாற்றி வருகிறது. இந்த ஒப்பந்ததின் மூலம் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் வாயிலாக நடத்தப்படும் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், நாட்டுப் புறக்கலைகள், சிலம்பாட்டம் ஆகிய பாடப்பிரிவு கள் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையம் (ICHC) கொச்சின் வாயிலாக நடத்தப் பட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம் வழித் தேர்வு கள் நடத்தவும் சான்றிதழ் வழங்கவும் வகை செய்யப்படும். தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன், கொச்சின் - இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையம் (ICHC) மீனா அனில்குமார் ஆகியோர் இப்புரிந்து ணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாற்றிக் கொண்டனர். நிகழ்வில் தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்கு நர் முனைவர் செ.கற்பகம், தமிழ் வளர் மைய இயக்குநர் முனைவர் குறிஞ்சி வேந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.