தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் திருக்களம்பூரைச் சேர்ந்த கவிஞர் நெ.இராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை சென்னை ராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். துறை இயக்குநர் அவ்வை அருள் மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.