திருச்சிராப்பள்ளி, நவ.7- உலக மனநல விழிப்புணர்வு நாளை முன்னிட்டு திருச்சி அறம் மனநல மருத்து வமனை சார்பில் “தமிழ் சைக்கியாட்ரி ஜர்னல்” என்ற மாத இதழ் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மனநல மருத்துவர் மகேஷ் ராஜகோபால் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பால ராஜ மாணிக்கம் மற்றும் நரம்பியல் நிபுணர் மருத்து வர் வேணி ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி பால ராஜ மாணிக்கம் “தமிழ் சைக்கியாட்ரி ஜர்னல்” இதழை வெளியிட்டு உரையாற்றினார். இந்த இதழில் மனநலம், உளவியல் சார்ந்த பிரச்ச னைகள், தற்கொலையும் சமூகப் பிரச்சனை யும், ஞாபக மறதி நோய், மதுப்பழக்க நோயின் அறிகுறிகள், தூக்கமின்மையும் அதன் தீர்வுகளும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்நிகழ்வில் அறம் மனநல மருத்துவ மனை நிர்வாக இயக்குநர் அனுராதா, மனநல மருத்துவர் அர்ஜூனன், உளநல சிகிச்சை நிபுணர் காயத்ரி மஹதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.