districts

img

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பு துவக்கப் பேரவை

திருவாரூர், ஆக.2-

     தமிழக மக்கள் ஒற்றுமை  மேடை மாவட்ட அமைப்பு துவக்க பேரவை புதன் கிழமை திருவாரூரில் நடை பெற்றது. பேரவைக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பி னர் ஜெ.முகமது உதுமான் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் க. உதயகுமார் அமைப்பின் நோக்கத்தை விளக்கி சிறப்பு ரையாற்றினார்.

    முன்னதாக சிபிஎம் மாநி லக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்ற கழக மாவட்ட செய லாளர் எம்.முஜிபுர் ரகுமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

     இதில், திமுக, சிபிஎம், காங்கிரஸ், மதிமுக, விசிக,  தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்ற கழகம், தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி, சிறு பான்மை நலக்குழு, தீண் டாமை ஒழிப்பு முன்னணி  உள்ளிட்ட முற்போக்கு, இடது  சாரி ஜனநாயக அமைப்புகள்  சார்பாக 41 பேர் மாவட்ட  அமைப்புக்கு தேர்வு செய் யப்பட்டனர். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கே.என்.முருகானந்தம் செயல்படுவார் என தீர்மா னிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, தமுஎகச மாவட்டத் தலை வர் எம்.சௌந்தராஜன், செய லாளர் ஜி.வெங்கடேசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த், சிஐடியு மாவட்ட பொரு ளாளர் இரா.மாலதி, வாலிபர் சங்க மாவட்டப் பொருளா ளர் கேசவராஜ், சிறுபான்மை நலக்குழு அமைப்பு நிர்வாகி எஸ்.ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.