districts

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முப்பெரும் விழா

திருச்சிராப்பள்ளி, நவ.25 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சங்க தலை வர்கள் படத்திறப்பு விழா,  முன்னணி ஊழியர்களுக் கான பயிற்சி வகுப்பு மற்றும்  பணி நிறைவு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை திருச்சியில் நடந்தது. விழாவிற்கு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் பால் பாண்டி தலைமை வகித்தார். விழாவில் சங்க நிறுவ னத் தலைவர் எம்.ஆர்.அப்பன், ஏ.ஐ.எஸ்.ஜி. இ.எப்  நிறுவனத் தலைவர் சுகு மால்சென், முன்னாள் பொதுச் செயலாளர்கள் இரா.முத்துசுந்தரம், கே. ஆர்.சந்திரன் ஆகியோர் படங்களை மாநில துணைத் தலைவர் பெரியசாமி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் சுடலை யாண்டி, தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதி யர் சங்க மாவட்டத் தலை வர் சிராஜுதீன் ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னாள் மாநில துணைத்தலைவர் பி.வி.சந்திரசேகரன் துவக்க உரை யாற்றினார். சங்கம் கடந்து  வந்த பாதை, நமது கட மைகளும், பொறுப்புகளும் என்ற தலைப்பில் மாநில துணைப் பொதுச் செய லாளர் சீனிவாசன் பேசினார்.  மாவட்டச் செயலாளர் பழனிச் சாமி, மாவட்ட பொருளாளர் பழனியப்பன், மாவட்ட துணை தலைவர்கள், வட்டக் கிளை துணைத் தலைவர்கள் ஏற்புரையாற்றினர். விழாவில் மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சத்தியவாணி, மாநில செயற் குழு உறுப்பினர் சுந்தரரா ஜன், மாவட்ட துணைத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்டச் செயலாளர் பாபு வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் சிவசங்கர் நன்றி கூறினார்.