மன்னார்குடி, ஆக.18-
நெல் குவிண்டாலுக்கு ரூ.3000 அறிவிக்க வேண்டும். மழைக்காலத்திற்கு முன்பாகவே பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என மன்னார்குடி வருவாய் கோட்டாட் சியர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கூட்டத்தில், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி பேசுகையில், உற்பத்தி செலவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேர ளாவில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2850 வழங்கப்படுகிறது. சத்தீஸ்கர் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் கூடுதலான விலை கிடைக்கிறது.
தமிழகத்தில் நெல்லுக்கு விலை அறிவிக்கிற போது, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000 அறி விக்க வேண்டும். அதேபோல கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கும், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கும் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட வில்லை. நடப்பு வேளாண்மை ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறையால் 30 சதவீதத்தி லிருந்து, 40 சதவீதம் பயிர்கள் காய்ந்து கருகி விட்டன. இச்சூழலில் காப்பீடு இருந்திருந்தால் விவசாயிகள், தங்களுக்கு பாதுகாப்பு இருக் கிறது என நம்பிக்கையுடன் இருந்திருப்பர்.
முறை வைத்து தண்ணீர் விடப்பட்டு, இன் றைக்கு 1400 கனஅடி தண்ணீர் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது யானைப் பசிக்கு சோளப்பொரியை கொடுப்பது போன்றதாகும். கடந்தாண்டு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கராக இருந்த குறுவை சாகுபடி, இந்த ஆண்டு 50 ஆயிரம் ஏக்கர் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. எனவே தண்ணீரை கூடுதலாக கொடுத்து குறுவை பயிர்களை காப்பாற்ற வேண்டும்.
குறுவைத் தொகுப்பு: உரம் கிடைக்கவில்லை
குறுவைத் தொகுப்பு திட்டம் மூலம் அரசு அறிவித்த இலவச உரம் எல்லோருக்கும் முழுமையாக கிடைக்கவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விவசாயிகள் 3.5 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார்கள். இதில் குறுவை விவ சாயம் 1.75 லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள் ளது. 76 கோடி ரூபாய்க்கான தொகுப்புத் திட்ட உரத்தை, குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவ சாயிகளுக்கு உரமாக பிரித்துக் கொடுத்திருந் தால் முழுமையடைய வாய்ப்பு கிடைத்திருக்கும். இதில் பிரச்சனை உள்ளது. அதை சரிசெய்து, கிடைக்காத விவசாயிகளுக்கு கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பா சாகுபடி தொடங்க உள்ள நிலையில், வேளாண்மை துறை டெட்போக்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகளில் முளைப்புத் திறன் உள்ளதா என பரிசோதனை செய்து உறுதிப்படுத்திட கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னார்குடியில் இயங்கி வந்த உழவர் சந்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் பேருந்து மூலம் காய்கறிகளை கொண்டு வந்து, உழவர் சந்தைக்கு விவசாயிகள் எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.
உரித்த தேங்காயை கேரளத்தில் அரசு கொள்முதல் செய்வதை போல, தமிழ்நாட்டி லும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாயிலாக நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். சம்பா தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டால், அரசு நிச்சயமாக உரம் வழங்கும் என்று எதிர்பார்க் கிறோம்.
மன்னார்குடி கோட்டத்திற்குட்பட்ட பகுதி களில் கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. மழைக் காலத் திற்குள் பழுதடைந்து வீடுகளை சரி செய்ய வேண்டும். இதே நிலையில்தான் ஆரம்ப சுகா தார நிலையங்களும் பள்ளிக்கூடங்களும் உள்ளன” என்றார்.