திருச்சிராப்பள்ளி, ஜூலை 17- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் (சிஐடியு) சங்க திருச்சி மண்டல பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மண்டல தலைவர் வேலு தலைமை வகித்தார். மண்டல துணைத் தலைவர் கள் வடிவேலன், சண்முக வேல், செயற்குழு உறுப்பி னர் நாகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலை அறிக்கையை மண்டல செயலாளர் ராசப் பன் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை மண்டல பொருளாளர் கருணாகரன் சமர்ப்பித்தார். மாநில பொரு ளாளர் ஏழுமலை, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நுகர்பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும் ரேசன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றும் முயற் சியை கைவிட வேண்டும். நுகர்பொருள் வாணிப கழகத் தில் கடந்த இரண்டு வருடங் களாக நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங் களை 12(3)ஒப்பந்தத்தின் படி பருவகால பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். கிடங்குகள், திறந்தவெளி சேமிப்பு மையங்களில் சுமைப்பணி தொழிலாளர் களை நிர்வாகமே நேரடி யாக நியமிக்க வேண்டும். சுமைப்பணி தொழிலா ளர்களை அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்த தனி யாரை ஊக்குவிக்கும் முயற்சியை கைவிட வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் 13 ஊழியர்களை திருச்சி மாவட்ட தொழி லாளர் நல ஆணையம் வழங்கிய நிரந்தரப்படுத்த கூடிய உத்தரவினை உடனே அமல்படுத்தி பணி நிரந் தரம் செய்ய வேண்டும். தமிழக அரசால் பரிந்துரைக் கப்பட்ட குறைந்தபட்ச கூலியை இடைக்கால நிவார ணமாக உடனே வழங்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட உள்ள மண்டல அலுவல கங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியக்கூடிய மேலாளர்களை பணிய மர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச் செயலா ளர் புவனேஸ்வரன் நிறை வுரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் கே.அய்யப்பன், செயற்குழு உறுப்பினர் ஆனந்த், மண்டல துணைத் தலைவர் எம்.அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண் டனர். முன்னதாக செயற் குழு உறுப்பினர் சின்னை யன் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் துரைமுருகன் நன்றி கூறினார்.