districts

தமிழ்ப் பண்பாட்டுக்கலை மரபினை வளர்க்க ஒப்பந்தம்

தஞ்சாவூர், ஜூன் 16-

     தமிழக அரசின் நிதி நல்கையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள, தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புதுச்சேரி இசை அருவி நிறுவனம் தர வகுப் புகள் மற்றும் சான்றிதழ், பட்டய வகுப்புகள் நடத்துவதற் குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம்  செய்துள்ளது.  

    புதுச்சேரி இசை அருவி நிறுவனம் புதுச்சேரியில் கடந்த 35 ஆண்டுகளாக இசை, நடனத்தைக் கற்பித்து பல்லா யிரக் கணக்கான மாணவர்களை உருவாக்கி வருகின்றது.  இவ்வகையில், தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு  மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) முனை வர் சி.தியாகராஜன், புதுச்சேரி இசை அருவி நிறுவன இயக் குநர் கலைமாமணி இராஜமாணிக்கம் ஆகியோர் இப்புரிந் துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.  

   நிகழ்வில், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர்  பெ.இளையாப்பிள்ளை, தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்கு நர் முனைவர் செ.கற்பகம், உதவிப்பதிவாளர்  ச.செல்வி, அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பேரா சிரியர் முனைவர் வெங்கடேசன், உதவியாளர் மு.கார்த்தி கேயன் ஆகியோர் உடனிருந்தனர்.