துறையூர், ஜூலை 8-
திருச்சி மாவட்டம், துறை யூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பிலியபுரம் ஒன்றியம் தளுகை ஊராட்சி மன்றத் தின் தலைவராக கலைச் செல்வி, துணைத் தலைவ ராக புவனேஸ்வரி ஆகி யோர் உள்ளனர்.
தளுகை ஊராட்சியில் அரசின் நிதி தேவையற்ற முறையில் செலவு செய்யப் படுவதாக மாவட்ட நிர்வாகத் துக்கு புகார் கிடைத்தது. அதன்பேரில் இதுகுறித்து விசாரிக்கப்பட்டது. விசார ணையில், புகாரில் தெரி விக்கப்பட்ட குற்றச்சாட்டு கள் நிரூபணமாகியுள்ளன.
இதனையடுத்து, தளுகை ஊராட்சியில் மேலும் முறைகேடுகள் நிக ழாமல் தடுப்பதற்காக தமிழ் நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 203-ன் கீழ் தலை வர் மற்றும் துணைத்தலைவ ருக்கு காசோலையில் கை யெழுத்திடும் அதிகாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உப்பிலியபுரம் ஒன்றிய கிராம ஊராட்சி கள், வட்டார வளர்ச்சி அலுவ லர்களின் நிபந்தனை களுக்கு உட்பட்டு ஊராட்சிப் பணியாளர்களின் ஊதியம், குடிநீர், மின்சாரம் கட்டணம் மற்றும் பராமரிப்பு செல வினம் உள்ளிட்ட அனைத்து திட்ட நிதி செலவினம் தொ டர்பாக நிர்வகிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் உத்தர விட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சிய ரின் உத்தரவு நகல்கள் சம்பந்தப்பட்ட தலைவர், துணைத் தலைவரிடம் வழங் கப்பட்டது.