districts

img

குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்

திருவாரூர், ஆக.31- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ தலைமையில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், காவிரி நீரை தர மறுக்கிறது கர்நாடகா அரசு.  உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாதந்தோ றும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை  வழங்கிட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. டெல்டா மாவட்டங்களில் தண்ணீ ரின்றி கருகும் குறுவை பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்து விவசாயிகளும் கூட்டத்தை புறக்கணித்தனர். பின்னர், காவிரி மேலாண்மை ஆணை யத் தலைவர் ஹல்தரை நீக்கக் கோரியும், தமிழ்நாடு அரசு இதில் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கோரி ஆட்சியர்  அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி, துணைத் தலைவர் ஜி.பவன்ராஜ் மற்றும் சிபிஐ சார்ந்த தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் முருகையன் உள்ளிட்ட பலர் கோரிக்கை களை நிறைவேற்றக் கோரி முழக்கமிட்டனர்.