districts

img

மாணவர்களை ஜெய்ஸ்ரீராம் கூற நிர்பந்தித்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்திடுக!

திருவாரூர், ஜன.24 - மாணவர்களை ஜெய்ஸ்ரீராம் என்று  கூறச் சொல்லி வற்புறுத்திய ஜிஆர்எம்  பெண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வா கத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க  கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஜிஆர்எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த ஜன.22 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பா பிஷேகம் நடைபெற்றது.  இவ்விழாவை முன்னிட்டு ஜிஆர்எம் பள்ளியில் காலை இறை வழிபாட்டின் போது, அப்பள்ளி நிர்வா கம் மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் என மூன்று முறை கட்டாயமாக சொல்ல வேண்டுமென நிர்ப்பந்தப்படுத்தி உள்ளது. இதனைக் கண்டித்து வாலி பர் சங்கத்தின் மாவட்டக் குழு சார்பாக  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ், தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஏ.கே.வேலவன் கண்டன உரை யாற்றினார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.டி.  கேசவராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகி கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு கல்வியை கொடுக்க வேண்டிய இடத்தில் மத வெறியை புகுத்த நினைக்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.