districts

img

மோசடியாக பட்டா மாறுதல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

புதுக்கோட்டை, பிப்.7 - விவசாயிகளின் நிலத்தை மோசடி யாகப் பட்டா மாறுதல் செய்தவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை திருமயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திரு மயம் தாலுகாவில் உள்ள மேலூர், அண்டக்குடிப்பட்டி, இளங்குடிப்பட்டி, கரையாம்பட்டி கிராமங்களில், காலம் காலமாக விவசாயம் செய்துவரும் விவசாயிகளின் நிலங்களை சில தனி நபர்கள் அதிகாரிகளின் துணையோடு மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள் ளனர். உயர்  அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொத்தமுத்துப்பட்டி, நகரத்துப் பட்டி, மேரிநகர், கப்பத்தான்பட்டி, வலயவயல், ஒடையப்பட்டி உள்ளிட்ட  கிராமங்களில் காலம் காலமாக விவசா யம் செய்து வரும் விவசாயிகளுக்கு உழ வடைப் பட்டா வழங்  வேண்டும். திருமயம் பாரத வங்கி முக்கத்தில் இருந்து விராச்சிலை சாலை வரை குடியிருந்து வரும் 32 பேரின் குடி சையை அப்புறப்படுத்த அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.  மேலும், லெனின் நகர், வெட்டிக் கண்மாய் புறகரையில் 50 ஆண்டுகளுக் கும் மேலாக குடியிருந்து வரும் 100  குடும்பங்களுக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இவர்களை அப்புறப்படுத்தாமல் வகை மாற்றம் செய்து பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 1995  ஆம் ஆண்டு ராயவரத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள் 42 பேருக்கு வழங்கப்பட்ட குடிமனைப் பட்டாவுக்கு கிராமக் கணக்கில் போக்குவரத்து செய் யப்படாமல் உள்ளது. இதனை உடனடி யாக போக்குவரத்து செய்து கணக்கில் ஏற்ற வேண்டும். ஆயிங்குடி கிராமத்தில் பூனையன் கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் சாதி  ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட் டுள்ள நிலங்களை மீட்க அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருமயம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றி யச் செயலாளர் எம்.வீரமணி தலைமை  வகித்தார். மாநில துணைத் தலைவர்  கே.முகமதலி கண்டன உரையாற்றி னார். கோரிக்கைகளை விளக்கி விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. ராமையன், தலைவர் எஸ்.பொன்னுச் சாமி, விதொச மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவா னந்தம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்  துரை.நாராயணன், மாதர் சங்க  மாவட்டப் பொருளாளர் ஜெ.வைகை ராணி உள்ளிட்டோர் பேசினர்.