districts

பாரதிதாசன் பல்கலை.யில் ஏப்.22 முதல் தையல் பயிற்சி

திருச்சிராப்பள்ளி, ஏப்.16 - திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறையில் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் நவீன தையல் இயந்திரங்கள் மூலம் ஒரு மாத தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. இப்பயிற்சி மூன்று அடுக்குகளாக வழங்கப்படுகிறது. கல்வித்தகுதி, வயது வரம்பு ஏதும் இல்லை. ஏற்கனவே பல வருடங்களாக தையல் அனுபவம் இருந்தும், சான்றிதழ் இன்றி செயல் படுவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. ஒரு மாத தையல் பயிற்சி முடிந்தவுடன் அடுத்த நிலை பயிற்சி ஒரு மாதம், மற்றும் இறுதி நிலை மேலும் ஒரு மாதம் என 3 மாதங்கள் வரை முழுமையான பயிற்சித் தொடர ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.  தற்போது கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் பயி லும் மாணவ-மாணவிகளும் இணைந்து இப்பயிற்சி பெற, ஒவ்வொரு நாளும் மூன்று பிரிவுகளில், குறைந்த  கட்டணத்தில் இப்பயிற்சி நடைபெறுகிறது. காலை 10.30  மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். மேலும் பல  திறன் பயிற்சிகளான எம்ப்ராய்டரி, கைவினைப் பொருட் கள், குந்தன் நகைகள், சிறுதானிய உணவு உற்பத்தி போன்ற தொழில்களுக்கும் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்படும். விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள், மாற்று பாலினத்தவர் இப்பயிற்சிகளில் இணைய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: இயக்குநர், மகளி ரியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜா மலை வளாகம், திருச்சிராப்பள்ளி-620023. கைபேசி எண்: 9842773237, 9842218555.