districts

சு.வெங்கடேசன் எம்.பி., மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

வரி உயர்வை நிரந்தரமாக கைவிட சிபிஎம் தொடர்ந்து போராடும் என அறிவிப்பு

மதுரை, ஜன.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட் டச் செயலாளர் மா.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித்துறையின் பங்கு மிக முக்கியமானது. ஆண்டு ஒன்றுக்கு 5.5 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டக்கூடிய இத் தொழிலை நம்பி 4 கோடி தொழி லாளர்கள் உள்ளனர் . ஒன்றிய பாஜக அரசு 2022 ஜனவரி 1 முதல் சுங்கிடி சேலைக்கு 5 சதமானம் ஜி.எஸ்.டி. வரியை 12 சதமாக உயர்த்தி அமல்படுத்தப் போவ தாக அறிவித்தது . ஒன்றிய பாஜக அரசின் இந்த அறிவிப்பானது நாடு முழுவதும் ஒரு லட்சம் ஜவுளி ஆலைகள் மூடுவதற்கு வழி வகுக்கும். 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது . அத்துடன் சுங்கிடி சேலை உள்ளிட்ட அனைத்து ஜவுளி துணிகளும் விலை உயரும் அபாயம் ஏற்பட் டது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் , ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை நேரில் சந்தித்து ஜி.எஸ்.டி. வரி உயர்வை ரத்து செய்திட வேண்டுமென வலி யுறுத்தினார் . மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஜி.எஸ்.டி. வரி உயர்வை ரத்து செய்ய கொடுத் தது. தற்போது ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  12 சதமானம் ஜி.எஸ்.டி. வரி உயர்வை ஒருமாத காலத்திற்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துள் ளார்.  இது, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களது முயற்சிக்கும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். ஜி.எஸ்.டி. வரி உயர்வை நிரந்தரமாக கை விட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் . இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.