தஞ்சை ஆட்சியர் தகவல்
கும்பகோணம், மே 10-
தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள மருதநல்லூர் கிராம பகுதி யில் சுமார் 61 பழங்குடியின ருக்கு இலவச வீடு வழங் கும் திட்டத்தின் கீழ் தனியாரி டம் நிலம் வாங்கப்பட்டு நீர் நிலை புறம்போக்கு மற்றும் வீடு இல்லாத அப்பகுதி பழங்குடியினருக்கு 61 நபர் களுக்கு தரமான வீடு கட்டும் பணியினை மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், ‘‘தஞ்சை மாவட்டத்தில் அண்மையில் பெய்த கோடை மழையினால் பருத்தி மற்றும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 1982 ஹெக்டர் (4,055 ஏக்கர்) விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதனை முழுமையாக கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு முழுமையாக கணக்கெடுக்கும் பணியை முடிவு பெற்று அதனை தமிழ் நாடு அரசுக்கு தெரிவிக்கப் படும். அதன் பின்னர் அரசு வழிகாட்டுதலின்படி நிவார ணம் வழங்கப்படும்’’ என தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் போது மாநிலங்களை உறுப்பினர் கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண் டனர்.