தஞ்சாவூர், மே 12- தஞ்சாவூர் மாவட்டத்தில் நடை பெற்று வரும் பாலப் பணிகளின் தரம் குறித்து, நெடுஞ்சாலைத் துறையின் உள்தணிக்கைக்காக அமைக்கப்பட்ட பொறியாளர் குழுவினர் ஆய்வு மேற் கொண்டனர். இந்த ஆய்வில், பாலப் பணிகளின் தரம் குறித்தும் அளவீடு கள் குறித்தும் சோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. உள்தணிக்கைக் குழு தமிழ்நாடு முழுவதும் நெடுஞ் சாலைத் துறையில் நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளின் தரம் மற்றும் கட்டுமானம் குறித்து, ஆண்டுதோறும் உள்தணிக்கை செய்து அலுவலகக் கோப்புகள் மற்றும் பணித்தளங்கள் கண்காணிப்புப் பொறியாளர்கள் தலை மையிலான உள்தணிக்கைக் குழுக் களால் ஆய்வு செய்ய தமிழ்நாடு அர சின் மூலம் அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டிற்கான உள் தணிக்கை ஆய்வுகள் மேற்கொள்வ தற்காக கண்காணிப்புப் பொறியா ளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. ஆய்வு இதனொரு பகுதியாக, தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் வட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலப் பணிகளை, திருச்சி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணசாமி தலை மையில் திருச்சி நெடுஞ்சாலை கட்டு மானம் மற்றும் பராமரிப்பு கோட்டத் தின் கோட்டப் பொறியாளர் கண்ணன், உதவிக் கோட்டப் பொறியாளர் ஜெய ராமன் மற்றும் உதவிப் பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய பொறியாளர் குழு ஆய்வு மேற் கொண்டு தணிக்கை செய்து வருகிறது. பேராவூரணி இந்த ஆய்வின்போது, தஞ்சாவூர் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் கோட்டத்தின் மூலம் பட்டுக்கோட்டை - பேராவூரணி - அறந்தாங்கி சாலை கி.மீ. 16/10 மற்றும் 21/8 ஆகிய இடங்க ளில் பூனைக்குத்தி மற்றும் அம்புலி ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலப் பணிகளையும், முசிறி - குளித்தலை - புதுக்கோட்டை - ஆலங்குடி - பேராவூரணி - சேதுபாவா சத்திரம் சாலை கி.மீ.147/6ல் பூனைக் குத்தியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலப் பணிகளை யும் உள்தணிக்கைக் குழு கள ஆய்வு மேற்கொண்டு தணிக்கை செய்தது. இதில் பாலத்தின் நீளம், அகலம் உள்ளிட்ட பாலத்தின் அளவீடுகளை அளந்தும், கட்டுமானத்தின் தரத்தினை உறுதிப்படுத்த நவீன கருவிகள் மூலம் தரக்கட்டுப்பாடு சோதனைகளை மேற்கொண்டும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது தஞ்சாவூர் நெடுஞ்சாலைத் திட்டங்கள் உதவிக் கோட்டப் பொறியாளர்கள் சத்தியன், கீதப்பிரியா, உதவிப் பொறியாளர்கள் சுதாகர், அன்சாரிராஜா மற்றும் இள நிலைப் பொறியாளர் பாலச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.