பட்டுக்கோட்டையில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
தஞ்சாவூர், ஜூலை 17- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பட்டுக்கோட்டை நகராட்சி நரியம்பாளையம் பகுதி யில் புதிய பேருந்து நிலையம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஒரே நேரத்தில் 50 பேருந்து கள் வந்து நிற்க வசதி கொண்ட அமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. மேலும் 120 கடைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் 100 கடைகள் முழுவதும் பணி முடிக்கப்பட்டு, எஞ்சிய 20 கடைகளில் உள்பூச்சு மற்றும் வெளிப்பூச்சு பணி நடைபெற்று வருகிறது.
பயணிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டு வருகிறது. பேருந்து நிலை யத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மற்றும் இருசக்கர நிறுத்துமிடம் அமைக்கும் பணிகளும் நடக் கின்றன. இந்த பணிகளை விரைந்து முடித்து பொது மக்களுக்கும் பயனாளிகளுக்கும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து பட்டுக்கோட்டை நகராட்சியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், பட்டுக்கோட்டையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுற்றுவட்டச் சாலை அமைய உள்ள இடம், தம்பிக் கோட்டை ஊராட்சி மறவக்காட்டில் உள்ள அமரிகுளத் தில் வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கும் பணி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
1,750 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்
தஞ்சாவூர், ஜூலை 17- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மினி வேனில் கடத்தப்பட்ட 1,750 கிலோ ரேசன் அரிசி மூட்டைகளைக் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இளைஞரைக் கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை அருகே சேதுபாவாசத்திரம் சாலை யில் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு காவல் பிரி வினர் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண் டனர். அப்போது, மினி வேனில் 1,750 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது.
இந்த மூட்டைகளைப் பறிமுதல் செய்த காவல்துறை யினர், இது தொடர்பாக சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த எம்.தமீம் அன்சாரியை (36) கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். அவர் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றி யுள்ள பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து ரேசன் அரிசி யைக் குறைந்த விலைக்கு வாங்கி பட்டுக்கோட்டை, சேது பாவாசத்திரம் பகுதிகளிலுள்ள மீன் பண்ணைகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.
ஜூலை 24 திருவாரூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்
திருவாரூர், ஜூலை 17 -
திருவாரூர் ஏஐடியுசி அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக புதன்கிழமை ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முரு கையன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்டச் செயலா ளர் ஆர்.சந்திரசேகர ஆசாத், தலைவர் ஜெ.குணசேகரன் மற்றும் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, தொமுச மண்டல தலைவர் என்.நீலமேகம், பொருளாளர் பா.தமிழரசன், ஐஎன்டியுசி மண்டல தலைவர் வி.அம்பிகா பதி, இணை செயலாளர் இ.சுதர்சணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ண யம் செய்யவும், நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்பை யும், 3 குற்றவியல் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 24 (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
பழைய இரும்புக் கடையில் தீ விபத்து
தஞ்சாவூர், ஜூலை 17- தஞ்சாவூர் கீழவாசல் டபீர் குளம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாகனி. இவர் நாகை சாலையில் மாரியம்மன் கோயில் புறவழிச்சாலையில் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடையின் வெளிப்புறத் தில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது.
கும்பகோணம் அரசு கல்லூரியில்
‘அறிவே ஆயுதம்’ வழிகாட்டுதல் நிகழ்ச்சி
கும்பகோணம், ஜூலை 17- கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் இள நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) 2024-2025 ஆம் கல்வியாண்டில் இளநிலை படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவ- மாணவியர்களுக்கு கும்பகோணம் மத்திய ரோட்டரி சங்கத்துடன் இணைந்து வழிகாட்டுதல் பயிற்சி நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அ.மாதவி தலைமை வகித்தார். கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் கு. மணிகண்டன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ரோட்டே ரியன் மேஜர் டி.என்.ஜெயக்குமார் கலந்து கொண்டார். திருப்பூர் தமிழ் இலக்கிய சங்க தலைவர் அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி “அறிவே ஆயுதம்” என்ற தலைப்பில் மாணவர்களிடம் உரையாற்றினார்.
ரோட்டரி சங்க செயலர் க.மணிமுத்து நன்றி கூறினார். விழாவில் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரி யர்கள், முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.