திருவாரூர், டிச.8- திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத் திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணி களை மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரடாச்சேரி ஒன்றி யம், பெரும்புகளுர் ஊராட்சி யில் 5.6.61 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டுவரும் மயான கொட்டகை, ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடை கட்டப்பட்டுவருவதையும், ரூ.18.94 லட்சம் மதிப்பீட்டில் நீலக்குடி மேலபாதிக்கு இடையே சாலை வசதி அமைக்கப்பட்டு வருவதை யும். ரூ.8.91 லட்சம் மதிப் பீட்டில் பெரும்புகளுர் ஓடைக் குளத்தில் மேற்கொள்ளப் பட்டுவரும் சீரமைப்பு பணி கள் மற்றும் தூர்வாரும் பணி கள் உட்பட பல்வேறு பணி களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டு, பணிகளை விரைந்து முடிந்திட அலு வலர்களுக்கு உத்தர விட்டார். ஆய்வில், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், கொர டாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பால சந்திரன்,வட்டாட்சியர் நக்கீ ரன்,வட்டார வளர்ச்சி அலு வலர்கள், உள்ளாட்சி அமைப் பின் பிரதிநிதிகள் உட னிருந்தனர்.