districts

img

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

தஞ்சாவூர்/மயிலாடுதுறை, செப்.17 -  திமுக மருத்துவ அணி  சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட குறிச்சி அரசு ஆரம்ப  சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடை பெற்றது.  நிகழ்ச்சிக்கு, மாவட்ட அமைப்பாளர் மருத்துவர் வி.சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அணி தலை வர் மருத்துவர் குணசேக ரன் வரவேற்றார். திமுக  தஞ்சை தெற்கு மாவட்ட செய லாளரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான கா. அண்ணாதுரை, தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி எம்எல்ஏவு மான என்.அசோக்குமார்  ஆகியோர் உரையாற்றினர்.  தஞ்சை தெற்கு மாவட்ட  மருத்துவ அணி சார்பில் ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான  இசிஜி கருவி, ஐ.சி.யூ. கட்டில், பிளாஸ்டிக் சேர், எடை மெஷின் உள்ளிட்ட 14  வகையான மருத்துவ உபகர ணங்கள் குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பயன்பாட்டிற்கென, வட்டார மருத்துவ அலுவலர் அருள்,  மருத்துவர் ரஞ்சித், அறி வானந்தம் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதேபோல் பட்டுக் கோட்டை ஒன்றியம், மதுக் கூர் அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்திற்கும் மருத்துவ  உபகரணங்கள் வழங்கப் பட்டன.  பாபநாசம் அய்யம்பேட்டையை அடுத்த சக்கராப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத் திற்கு திமுக சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலர் நாசர் தலைமை வகித்தார்.   மாநிலங்களவை உறுப் பினரும், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலருமான கல்யாணந்தரம் மருத்துவ உபகரணங்களை, சக்க ராப்பள்ளி அரசு ஆரம்ப சுகா தார நிலைய மருத்துவர் மோனிஷா-விடம் வழங்கி னார். தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார். இதில் திமுக  உறுப்பினர்கள் மற்றும் சுகா தார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம்  சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மருத் துவமனை வளாகத்தில் நடைபெற்றது.  மயிலாடுதுறை மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் நடைபெற்ற விழா வில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளரு மான நிவேதா எம்.முருகன் மருத்துவ உபகரணங்களை மருத்துவமனைக்கு வழங் கினார்.