districts

அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை

முதலமைச்சருக்கு ஊழியர் உதவியாளர் சங்கம் நன்றி

சென்னை, மே 7-

    அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே மாதம் கோடைவிடுமுறை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சங்கத்தின் தலை வர் எஎப்.ரத்தினமாலா, பொதுச் செயலாளர்  டி.டெய்சி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு

    32 வருட காலமாக தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து போராட் டம் நடத்தினோம். ஆனால் நிறை வேற்றப்படவில்லை, நாங்கள் காத்திருப்புப் போராட்டம் தொடங்  கிய 12 மணி நேரத்தில் பெண்கள்  போராடக்கூடாது என்று சொல்லி உடனே அழைத்து பேசி கோரிக்கை யை நிறைவேற்றுங்கள் என ஆணையிட்ட முதல்வருக்கு  நன்றி  தெரிவித்து கொள்கிறோம், இந்த அரசு சமூகநீதி அரசு என்பதையும், பெண்களுக்கான அரசு என்பதை யும் நிரூபித்துள்ளது.

   எங்களின் கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று முதல்வர் ஆணையிட்ட உடன் பெண்களின் இன்னல்களை புரிந்து கொண்டு போராடும் ஊழி யர்களுக்கு இரவு நேரத்தில் பாது காப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தர விட்டு காலையில் பேச்சுவார்த்தை நடத்தி உடனே கோடை விடுமுறை இந்தாண்டு வழங்கப்படும் என்று  உறுதியளித்து கோடைவிடுமுறை யை 15 நாட்கள் ஊழியர்களுக்கும் உதவியாளர்களுக்கும் வழங்கிய சமூகநலம் மற்றும் பெண்கள் உரி மைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கும் சங்கத்தின் சார்பில்  நன்றிகளை தெரிவித்து கொள்கி றோம்.

   அமைச்சர் சொன்னவுடன் உட னடியாக அதற்கான பணிகளில்  ஈடுபட்டு மத்திய அரசின் அனுமதி யை பெற்று பல்வேறு மாநிலங்க ளில் உள்ள அரசாணைகளை எல் லாம் பார்வையிட்டு உடனடியாக ஊழியர்கள் மற்றும் உதவியாளர் இருவருக்கும் விடுமுறை என  அரசாணை வெளியிட்ட சமூக நலத்துறை முதன்மை செயலர் மற்  றும் ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சித்திட்ட குழும இயக்கு நர் மற்றும் உதவி இயக்குனர்  அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்

  இந்த கோரிக்கை நிறைவேற எங்களுடன் நின்று  எங்களது கோரிக்கைகளை எப்போதும் அர சின் கவனத்திற்கு கொண்டு செல்லும் சிபிஎம் சட்டமன்ற உறுப்பி னர்கள்  சின்னதுரை நாகைமாலி ஆகியோருக்கும் நன்றி தெரி வித்துக்கொள்கிறோம்.

  மேலும் இது போன்று எங்க ளின் நீண்ட நாள் கோரிக்கையான முத்தான மூன்று கோரிக்கை தேர் தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்  குறுதியையயும், முதல்வர் , அமைச்சர் ஆகியோர் நிறைவேற்றி தருவார்கள் நம்பிக்கையில் 50 ஆயிரம் ஊழியர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றோம். காலிப்  பணியிடங்களை உடனடியாக நிரப்ப அமைச்சர் ஆவன செய்ய  வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

   இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.