தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையின் சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ் நடைபெற்ற மாவட்ட அளவிலான பழப்பயிர்கள் சாகுபடி குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கத்தினை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். மேலும், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ் சிப்பம் கட்டும் அறை அமைத்த விவசாயிகளுக்கு ரூ.22 லட்சம் மதிப்பிலான திட்ட மானிய உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.