தஞ்சாவூர், ஆக.11 -
சுகாதார செவிலியர்களுக்கு அலுவலக நேரம் தவிர்த்து, இரவு நேரங்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடுப்பூசி நாளன்று தடுப்பூசி பணி யுடன் யு-வின் ஆப் சென்ற புதிய செயலி மூலம் டேட்டா எண்ட்ரி பணி யையும் சேர்த்து பார்த்திட வலியு றுத்தும் அரசாணையை திரும்ப பெற வேண்டும். அனைத்து ஆரம்ப சுகா தார நிலையங்களிலும் ஒரு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டரை நியமித்து சுகாதார செவிலியர்களின் பணிச் சுமையை குறைக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் சுமார் 2,300 கிராம சுகாதார செவிலியர் பணியி டங்கள் காலியாக நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை உடனே நிரப்ப வேண்டும். முற்றிலும் பழுதடைந்த தங்குவதற்கு தகுதியில்லா துணை சுகாதார மைய கட்டிடங்களுக்கு வாடகை பிடித்தம் செய்வதை நிறுத்தவும், பிடித்தம் செய்த தொ கையை திரும்ப வழங்கவும் வேண்டும்.
5 வருடம் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்க வேண்டும். அரசாணைக்கு எதிராக சுகாதார செவிலியர்களை அலுவலக நேரம் தவிர்த்து இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை தவிர்த்து, பணிக்கு சம்பந்தமில்லாத வேலைகளை செய்ய வற்புறுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலி யர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் இ.விசாலாட்சி தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் என்.சீதாலெட்சுமி, மாவட்டப் பொருளாளர் ஆர்.வி.திருமாமகள் ஆகியோர் கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து 300 -க்கும் மேற்பட்ட சுகாதார செவிலி யர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
திருவாரூர் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அமைப்பின் மாவட்டத் தலை வர் ஜி.கலையரசி தலைமை வகித் தார். மாநில துணைத் தலைவர் ப. பரமேஸ்வரி துவக்கவுரையாற்றி னர். மாவட்டச் செயலாளர் ஆர்.பாஸ்கரவள்ளி கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.சண்முகம் நிறைவுரையாற்றினார்.