districts

img

அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி மருத்துவராகும் விவசாயக் கூலி தொழிலாளியின் மகன்

மயிலாடுதுறை,  ஜன. 31 - மயிலாடுதுறை மாவட் டம் திருக்கடையூரை ஒட்டி யுள்ள அபிஷேகக் கட்டளை  என்கிற கிராமத்தில் விவசாய  கூலி வேலை செய்யும் ஏழைக்  குடும்பத்தை சேர்ந்த அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர் நீட் தேர்வில் வெற்றி  பெற்று மருத்துவக் கல்லூரி யில் எம்பிபிஎஸ் படிக்க உள்ளார்.  மயிலாடுதுறை மாவட் டம் திருக்கடையூர் அபிஷேக கட்டளை காலனி தெருவை சேர்ந்தவர் பிரேமா. கண வரை இழந்த இவர் விவசாய  கூலி வேலைக்கு செய்து குடும்பத்தை கவனித்து வரு கிறார். இவருடைய மகன்  ஜோசப் சுந்தர்சிங், திருக்க டையூர் அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, பின்னர் அருகில் உள்ள ஆக்கூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2  முடித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதைத் தொடர்ந்து மாண வன் ஜோசப் சுந்தர்சிங் மருத் துவப் படிப்பு படிக்க விண்ணப் பித்திருந்த நிலையில், அண்மையில் சென்னையில் நடந்த மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் ஜோசப் சுந்தர் சிங் கலந்து கொண்டார். இதில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்ததால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு காரணமாக மாணவர் ஜோசப் சுந்தர்சிங்-க்கு இடம் கிடைத் துள்ளது.  இதுகுறித்து மாணவர் ஜோசப் சுந்தர்சிங் கூறுகை யில், “நான் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  அரசு பள்ளியில் தமிழ் வழி யில்தான் படித்தேன். பிளஸ்  2 முடித்த பிறகு நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க பண வசதி இல்லாததால் வீட்டிலிருந்தே படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். மருத்துவ படிப்பு பயில அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத் துள்ளது மகிழ்ச்சி அளிக் கிறது. நான் நன்றாக படித்து மருத்துவராகி ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த சேவை செய்வதே எனது லட்சியம்” என்றார் உற்சாகத்துடன்.