மயிலாடுதுறை, டிச.2 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், சங்கரன் பந்தல் அருகே எரவாஞ்சேரி கிரா மத்தில் தரமற்ற முறையில் பள்ளி கட்டிடத்தை ஆண்டுக்கணக்கில் கட்டுவதாகவும், ஏற்கனவே சேத மடைந்துள்ள நூலக கட்டிடத்தில் பள்ளி இயங்குவதால் சின்னஞ்சிறு மாணவர்கள் கடும் அவதியடைவ தாகவும் புகார் எழுந்துள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வா கம் இதில் தலையிட்டு துரித நட வடிக்கை மேற்கொள்ள வேண்டு மென பெற்றோர், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். எரவாஞ்சேரி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக அருகேயுள்ள நூலக கட்டிடத்தில் இயங்கி வரு கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன. இப்பள்ளியுடன் சேர்த்து செம்பனார்கோவில் ஒன்றியத்துக் குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 8 பள்ளிகளின் கட்டிடம் இடிக்கப் பட்டு, சட்டமன்ற உறுப்பினர் நிதியி லிருந்து பணிகள் நடந்து, விரைவில் நிறைவடைந்தது. இதையடுத்து அக்கட்டிடம் மாணவர்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தப் பள்ளி கட்டிட பணிகள் மட்டும் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது பெய்து வரும் கன மழையால் பள்ளி கட்டிடத்தில் இருந்த செங்கற்கள் ஆங்காங்கே இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று தற்காலிகமாக பள்ளி இயங்கி வரும் நூலக கட்டிடத்திலும் விரிசல் காணப்படுவதால், மாணவர்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் பயின்று வருகின்றனர். மழைக் காலங்களில் நூலக கட்டிடம் முன்பு மழைநீர் குளம் போல் தேங்குவதால், பள்ளி குழந் தைகள் பெரும் அவதிக்குள்ளாவ தாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். உடனடியாக பள்ளி கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. மேலும் சேதமடைந்துள்ள நூலக கட்டிடத்திலிருந்து, பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.