districts

img

மாணவர் சங்கத் தலைவர் கைதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

திருவாரூர், ஏப்.25-

  தஞ்சாவூர் தமிழ் பல்க லைக்கழகத்தில் பயின்ற இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவரும் தமிழ் பல்கலைக்கழக முன்னாள்  மாணவருமான அரவிந்த் சாமி தமிழக கவர்னர் ரவி யிடம் பட்டம் பெறுவதற்கா கச் சென்றார். அப்போது  பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டிருந்த காவல்துறை யினர் அரவிந்த்சாமியை கைது செய்தனர். அரவிந்த்சாமி யின் கைதைக் கண்டித்து  இந்திய மாணவர் சங்கத்தி னர் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல் லூரி வளாகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  திருவாரூர் திரு.வி.க  அரசு கலை கல்லூரி மாண வர்கள் 500 பேர் மாவட்டத் துணைச் செயலாளர் திரு முருகன், மாவட்டத் துணைத் தலைவர் வி.சந்தோஷ், மாநி லக்குழு உறுப்பினர் ஐ. அபிஷா, மற்றும் பிராவின்,  ஈஸ்வரன், பொன்மொழி  ஆகியோர் தலைமையில் வகுப்புகளைப் புறக்க ணித்து காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.