districts

img

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும்

திருச்சிராப்பள்ளி, அக்.11 - இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட மாநாடு வெண்மணி இல்லத்தில் புதனன்று நடந்தது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் மார்க்சியா தலைமை வகித்தார். மாநில  துணைச் செயலாளர் மோகன் துவக்க உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் சூரியா வாழ்த்துரை வழங்கினார். எதிர்கால பணிகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஆமோஸ் பேசினார்.  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவை உடனே நடத்த வேண்டும். துவாக்குடி அண்ணா வளைவு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தரத்தை உயர்த்த வேண்டும், குமுளூர் அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத்தின் புதிய தலைவராக வைரவளவன், செயலாளராக ஆமோஸ், துணைத் தலைவர்களாக அபி, தமிழரசன், துணைச் செயலாளர்களாக அரவிந்த், கௌதம், உள்பட 17 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில துணைத்தலைவர் சம்சீர் அகமது நிறைவுரையாற்றினார். துணை ஒருங்கிணைப்பாளர் வைரவளவன் நன்றி கூறினார்.