திருவாரூர், பிப்.23- திரு.வி.க கல்லூரி நூலகத்தை மேம்படுத்த வேண்டுமென மாணவர் சங்கத்தின் கல்லூரி கிளை மாநாடு வலியுறுத்தியுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் திரு.வி.க. கல்லூரியின் 35 ஆவது கிளை மாநாடு மாவீரன் பகத்சிங் நினைவரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ப.சுர்ஜித் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் துவக்க உரையாற்றினார். மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி புதிய நிர்வாகிகளை அறிவித்து உரையாற்றினார். மாநாட்டில் 31 பேர் கொண்ட புதிய கிளை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட னர். இதில் கல்லூரி தலைவராக சே.செல்வா, செயலாளராக து.பொன்மொழி அஜய், துணைத் தலைவராக விக்னேஷ், சத்ய மூர்த்தி, துணைச் செயலாளராக ஹரிஷ், தினேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். திரு.வி.க கல்லூரி மாணவிகளின் விளை யாட்டு திறனை மேம்படுத்த, பெண் உடற் கல்வி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து வகுப்பறை கட்டிடங்களி லும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவு ரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். திருவிக கல்லூரியில் திறந்த வெளி கலையரங்க மேடை அமைத்தும், கல்லூரியில் செயல்படும் நூலகத்தை மேம்படுத்தவும் வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.