கரூர், டிச.19 - ஸ்மார்ட் மீட்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூரில் தெருமுனைக் கூட்டம் நடை பெற்றது. மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசு கொண்டு வந் துள்ள மின்சார திருத்த சட்டம் 2020-ஐ திரும்ப பெற வேண் டும். விவசாயத்திற்கும், வீடு களுக்கும் வழங்கப்படும் இலவச மின்சாரத் திட்டத்தை ஒழித்திடும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு கை விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம் மாயனூர், கிருஷ்ணராய புரம் கடைவீதியில் நடை பெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் கிருஷ்ணராயபுரம் ஒன்றி யச் செயலாளர் அ.நாகராஜ் தலைமை வகித்தார். விவசா யிகள் சங்க மாவட்டத் தலை வர் கா.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் ஜி.தர்மலிங்கம் ஆகி யோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். மாவட்டப் பொருளாளர் கே.சுப்பிர மணியன் நன்றி கூறினார்.