அறந்தாங்கி, பிப்.16- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து, நகரின் முக்கிய பகுதிகளில் தொழிற்சங்கங்கள் தெருமுனைப் பிரச்சாரம் செய்தனர். இந்த பிரச்சாரத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க போக்குவரத்துக் கிளை தலைவர் என். யோகராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் க. முகமதலி ஜின்னா, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ. ஸ்ரீதர், பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன், மாவட்டத் துணைச் செயலாளர் அன்பு மணவாளன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே. தங்கராஜ், தாலுகா செயலாளர் நாராயணமூர்த்தி, தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், முத்துசாமி உட்பட திரளான தொழிலாளர்கள், ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து பிரச்சாரம் செய்தனர்.