districts

img

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை 6 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

மயிலாடுதுறை, டிச.8-  மயிலாடுதுறை மாவட்  டத்தில் மாண்டஸ் புயல் முன் னெச்சரிக்கையாக தமிழ்  நாடு அரசு, நீர்வளத்துறை சார்பில் (பொதுப்பணித் துறை) பொறையார், மங்கை நல்லூர், செம்பனார் கோவில்  ஆகிய 3 மையங்களிலும் கன மழை வெள்ளத்தால் உடைப்பு  ஏற்பட்டால் அதைத்தடுக்கும் விதமாக 6 ஆயிரம் மணல்  மூட்டைகள், 15 ஆயிரம் சாக்கு பைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  பொறையார் பகுதிகளில்  வீரசோழன் ஆறு, மஞ்ச ளாறு, மகிமலையாறு ஆகிய மூன்று ஆறுகளில் உள்ள  ஷட்டர்கள் திறக்கப்பட்டுள் ளதாகவும்,  ஆற்றுப்பகுதி யில் உடைப்பு ஏற்பட்டால் அதை சரிசெய்யும் விதமாக மணல்மூட்டைகள், சாக்கு பைகளும் தயாராக உள்ள தாக  நீர்வளத்துறை உதவி  செயற்பொறியாளர் பாண்டி யன் தெரிவித்துள்ளார். ஆட்சியர் ஆய்வு மயிலாடுதுறை மாவட்  டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.  வானகிரி புயல் பாது காப்பு மையம் மற்றும்  காவி ரிப்பூம்பட்டினம் பகுதிகளில் மீனவர்களை சந்தித்து பாது காப்பாக இருக்க அறிவு றுத்திய மாவட்ட ஆட்சியர்  தேசிய பேரிடர் மீட்புபடையி னரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கடலோர பகுதிகளை கண்காணிக்க 24 பேர் கொண்ட  தேசிய பேரிடர் மீட்பு குழு வினர் வானகிரி கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். புயல் மற்றும் மழை காரணமாக  ஏற்படக்கூடிய பாதிப்பு களை உடனடியாக அகற்றி இயல்பு நிலை ஏற்படுத்திட  ஏதுவாக 34 ஜேசிபி , 7 ஜென ரேட்டர்கள், 22 பவர்சா, 10 ஹிட்டாச்சி, 26,870 மணல்  மூட்டைகள், மரம் அறுக்கும் கருவிகள், சவுக்கு கம்பங்  கள் 23065, பிளிச்சிங் பவு டர் 4700 கிலோ ஆகியன் போதிய அளவில் தயார்நிலை யில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். பொது மக்கள் புயல், மழை காலங்க ளில் பாதுகாப்பாக இருக்க வும், அரசின் எச்சரிக்கை களை முழுமையாக கடை பிடித்து நடந்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.