மயிலாடுதுறை, ஜூன் 5-
மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை ஊராட்சி கொங்கா னோடை கிராமத்தில் புதிய அங்காடி கடை திறப்பு விழா திங்க ளன்று நடைபெற்றது.
விழாவில், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு 170க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறும் வகையில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், மாவட்டத் துணைச் செயலாளர் ஞான வேலன், ஒன்றியச் செயலாளர் அப்துல் மாலிக், ஊராட்சி மன்றத் தலைவர் காவிரி ஜெயச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், ஒன்றியக் குழு உறுப்பினர் கிரு பாவதி சிவக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.