districts

img

போக்குவரத்தை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்துக! போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 14 - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக  ஊழியர்கள் சங்க 37 ஆவது ஆண்டு பேரவை  கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசா மஹாலில் தோழர் மன்னார்சாமி நினைவரங்கத்தில் செவ்வா யன்று நடைபெற்றது.  கூட்டத்திற்கு மண்டல தலைவர் சீனி வாசன் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை சங்க துணைத்தலைவர் சிவக் குமார் ஏற்றினார். சிஐடியு மாநகர் மாவட்டச்  செயலாளர் ரெங்கராஜன் துவக்கவுரை யாற்றினார். வேலை அறிக்கையை மண்டல பொதுச் செயலாளர் கருணாநிதி வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை மண்டல பொரு ளாளர் சிங்கராயர் சமர்ப்பித்தார். சம்மேளன  துணைத்தலைவர் பிச்சை நிறைவுரையாற்றி னார்.  கூட்டத்தில் 14வது ஊதிய ஒப்பந்தத்தை பே-மேட்ரிக்ஸ் பொருத்தி விரைந்து இறுதிப் படுத்த வேண்டும். நகர பேருந்துகளில் இலவச  பெண்கள் பயண திட்டத்தால் ஏற்படும் பேட்டா  இழப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள், போக்குவரத்து  கழகங்களில் ஓய்வு பெற்றோருக்கு வழங்கப் பட வேண்டிய 78 மாத டி.ஏ உடனடியாக வழங்க  வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு மருத்துவக்  காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியா ளர் காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். திருச்சி, கரூர் மண்டல தொழி லாளர் விரோத போக்கை கண்டித்தும், சங்க  பாகுபாடு பார்ப்பதை கண்டித்தும் ஜூலை 16  ஆம் தேதி இயக்கம் நடத்துவது. பேருந்திற்கு  தேவையான தரமான உதிரிபாகங்கள் அனைத்து கிளைகளிலும், பண்டக சாலைகளி லும் தேவைப்படும் போது பயன்படுத்தும் வகையில் வாங்கி வைக்க வேண்டும்.  ஊதிய ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி மிகைப்பணி(ஓ.டி) புரியும் தொழிலாளர் களுக்கு ஊதியம் கணக்கிட்டு வழங்க வேண்டும். திருச்சி தீரன் நகர் தகுதிச்சான்று  பிரிவில் நடைபெறும் பணிகளை முறைப் படுத்த வேண்டும். போக்குவரத்தை தனியார்  மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்.  திருச்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கி ணைந்த பேருந்து நிலைய பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க துணைத் தலைவர் முருகன் நன்றி கூறினார்.