districts

img

சிஐடியு தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகளை அப்புறப்படுத்துவதை தடுத்திடுக!

திருச்சிராப்பள்ளி, மார்ச் 20- திருச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலை மையில் நடைபெற்றது.  கூட்டத்தில் சிஐடியு திருச்சி மாவட்ட தள்ளு வண்டி, தரைக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா ளர் செல்வி மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தார்.  அந்த மனுவில், ‘‘திருச்சி மாநகரின் பல பகுதிகளில் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 1200க்கும் மேற்பட்ட நபர்கள் தள்ளுவண்டி, தரை  கடைகளில் பழங்கள், காய் கறிகள், ரெடிமேட் துணி போன்றவற்றை வியாபாரம்  செய்து வருகிறார்கள். இவர் களை திருச்சி மாநகராட்சி  நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர் கள் என்று கூறி கடைகளை எடுத்து விடுகிறார்கள்.  குறிப்பாக சிஐடியு சங்  கத்தின் கீழ் உள்ள கடை களை எடுத்து விடுகிறார்கள். மத்தியப் பேருந்து நிலை யம், மரக்கடை, என்.எஸ்.பி  ரோடு இன்னும் பல பகுதி களில் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வியாபாரம் செய்வதற்கான  ஆணை பெற்றிருந்தும் வியா பாரிகளை துரத்தும் வேலை யை மாநகராட்சி நிர்வாகம் செய்கிறது.  எனவே தாங்கள் தலை யிட்டு வியாபாரிகளின் வாழ் வாதாரம் மற்றும் வியாபாரி களை பாதுகாக்க வேண்டும். மேலும் விற்பனை குழு  அமைக்காமல் வியாபாரி களை அப்புறப்படுத்தக்கூடாது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் கணேசன் மற்றும் மரக்கடை  வியாபாரிகள் உடனிருந்தனர்.