உடுமலை, அக்.21 - உடுமலையில் மாநிலம் தழுவிய 2ஆம் ஆண்டு கபடி போட் டியில் பெண்கள் பிரிவில் செங்கல்பட்டு அணியும், ஆண்கள் பிரிவில் தமிழன் தளவாய்பட்டினம் அணியும் முதலிடம் பெற்ற ன. உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி நினைவு அறக்கட்டளை வளாகத் தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு கபடி போட்டிகளை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப் பினர் மகேந்திரன் துவக்கி வைத்தார். அறக்கட்டளை நிறுவ னர் கே.ஆர்.எஸ்.செல்வராஜ் வரவேற்றார். முதல்நாள் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற செங்கல்பட்டு பெண்கள் அணிக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரம், கோப்பையும், இரண்டாம் பரிசு பெற்ற அணிக்கு ரூ. 10ஆயிரம், கோப்பையும், 3ஆம் பரிசாக ரூ.7ஆயிரம், கோப் பையும், 4ஆம் பரிசாக ரூ.5ஆயிரம், கோப்பையும் வழங்கப் பட்டன. பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் ஆண்களுக் கான போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் முத லாவதாக வெற்றி பெற்ற தமிழன் தளவாய்பட்டினம் அணிக்கு வெற்றிக் கோப்பை, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட் டது. இரண்டாம் பரிசாக பழனி காவல் துறை அணிக்கு கோப்பை, ரூ.10 ஆயிரம், மூன்றாம் பரிசாக கோப்பை, ரூ.7 ஆயிரம், நான்காம் பரிசாக கோப்பை, ரூ.5ஆயிரம் வழங்கப் பட்டது. இப்போட்டியில் தமிழகம் முழுவதும் ஆண்கள், பெண்கள் பிரிவில் சேர்த்து மொத்தம் 43 அணிகள் கலந்து கொண்டன. உடுமலை மக்கள் பேரவைத் தலைவர் யூ.கே.பி.முத்துகு மாரசாமி உடுமலை மகளிர் காவல் ஆய்வாளர் கோப்பெருந் தேவி, உடுமலை வியாபாரிகள் சங்கப் பொருளாளர் எம். ஜெகநாதன், அக்ஷர வித்யா மந்திர் செயலாளர் சண்முகப் பிரியா, விவேகானந்தா பள்ளிச் தாளாளர் மூர்த்தி, என்ஜினியர் ரவி ஆனந்த், அமராவதி சைனிக் பள்ளி ஆசிரியர் இளமுருகு உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர். லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவ னர் கே.ஆர்.எஸ்.செல்வராஜ், டிரஸ்டி என்ஜினீயர் பாலமுரு கன், ஆலோசகர் சந்திரன், தலைமை ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட் மற்றும் நிர்வாகிகள் இந்த போட்டிக்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.