கும்பகோணம்,ஜன.21- கும்பகோணத்தில் கார்த்தி வித்யா லயா பள்ளியில் மாநில அளவிலான உண்டி கோல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்க ளை சேர்ந்த 11 பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் கலந்து கொண்டனர். கிராமங்களில் சிறுவர்கள் விளை யாடவும் முன்னோர்கள் காட்டில் தற்காப்பிற்கு வேட்டையாடவும் உப யோகித்த கல்டா பெல்ட் எனும் உண்டி கோல் போட்டி கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாநில அளவில் நடைபெற்றது. உண்டி கோல் போட்டியானது மாணவ மாணவியர்களை படிப்பில் மட்டும் அல்லாமல் அனைத்து நிகழ்ச்சி களை உற்றுநோக்கும் திறனை வளர்க்கும் ஒரு கருவியாக உள்ளது. ஒரு பொருளை குறி வைத்து அடிப்ப தன் மூலம் மாணவ, மாணவியர்களின் நினைவு கூருதல், மனது ஒருங்கிணை ப்பு ஏற்படுகிறது. இதனால் மாணவ மாணவியர்கள் அதிகம் கவனத்தோடு செயல்பட முடியும் என்ற முயற்சியோடு இந்த போட்டியினை கார்த்தி வித்யா லயா பள்ளி தாளாளர் கார்த்திகேயன் ஏற்பாடு செய்திருந்தார் பள்ளி தாளாளர் கார்த்திகேயன் மாணவ மாணவியர்களுக்கு உண்டி கோல் விளையாடுவதின் நோக்கம் மற்றும் சிறப்பு ஆகியவற்றை எடுத்து ரைத்து போட்டியினை துவங்கி வைத்தார். வயதின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக இந்த போட்டி நடை பெற்றது. இதில், ஒவ்வொரு மாணவ ருக்கும் ஐந்து வாய்ப்புகள் வழங்கப் பட்டன. அதிக முறை வெற்றி பெற்ற வர்களுக்கு தங்கப்பதக்கமும், இரண்டாவதாக வெற்றி பெற்றவர்க ளுக்கு வெள்ளி பதக்கமும், மூன்றா வதாக வெற்றி பெற்றவர்களுக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டன. இதில் பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், தலைமை ஆசிரியர் அம்பிகாபதி, மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. படிப்பில் மட்டு மன்றி பிற கலைகளிலும் விளையாட்டுத் துறையிலும் மாணவ மாணவியர்களை ஈடுபடுத்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக பெற்றோர்கள் தெரி வித்தனர்.