திருச்சி மாவட்டம் முசிறி துறையூர் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கராத்தே சங்கம் சார்பாக மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் துவக்க விழாவில் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.