மயிலாடுதுறை, ஜுலை 29 - மயிலாடுதுறை மாவட்டம், செம்ப னார்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழன் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான ஓபன் கராத்தே, சிலம்பம் யோகா 2024 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி னார். போட்டிகளில் மயிலாடுதுறை, கட லூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தமி ழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கராத்தே பிளாக் மற்றும் கலர் பெல்ட்டுகளுக்கான போட்டியில் கட்டா, குமித்தே பிரிவுகளிலும், யோகாசன போட்டியில் புஜங்காசனம் சர்வாங்க ஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆச னங்களில் இரண்டு யோகா ஆசனங்க ளையும், சிலம்பாட்டத்தில் குத்து வரிசை, தட்டு வரிசை, அடிவரிசை, பிடி வரிசை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 5 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி னர். தமிழன் ஸ்போர்ட்ஸ் அகாடமி கராத்தே பயிற்றுநர் விநாயகம் தலை மையில் நடைபெற்ற இப்போட்டிகளில், கராத்தே, சிலம்பம், யோகா கலை வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். போட்டி யில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றி தழும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பைகளும் வழங்கப் பட்டன.