districts

img

நாகப்பட்டினத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

நாகப்பட்டினம், டிச.31 - நாகப்பட்டினம் மாவட்டம் உழைக்கும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தீக்க திர் நாளேட்டின் ஆண்டு சந்தா இயக்கத்தை சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் துவக்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீக்கதிர், மார்க்சிஸ்ட், செம்மலர் ஆண்டு சந்தா சேர்க்கும் இயக்கம் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதிலும் அனைத்து இடைக்  கமிட்டிகள் மற்றும் வெகுஜன ஸ்தாபனங்கள்  இதில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங் களுக்கு முன்பாக 150 தீக்கதிர், 150 செம்ம லர், 150 மார்க்சிஸ்ட் ஆகியவற்றிற்கான சந்தாக் களை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ண னிடம் ஒப்படைக்கப்பட்டதன், தொடர்ச்சி யாக தற்போது மாவட்டம் முழுவதிலும் இப்பணி நடைபெற்று வருகிறது. சிபிஎம் நாகை மாவட்ட செயலாளர் வி.மாரிமுத்து, மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி மற்றும் மாவட்ட செயற்குழு. மாவட்டக் குழு உறுப்பினர்கள் தீக்கதிர் ஆண்டு சந்தா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.  இந்நிலையில் நாகையை அடுத்த சிக்கல்  ஊராட்சியில் வடக்கு ஒன்றியம் சார்பில் கீழ்  கரையிருப்பு கிராமத்தில் மாநில செயற்குழு  உறுப்பினரும், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான பெ.சண்முகம், தோழர்களின் இல்லத்திற்கே சென்று தீக்கதிர் ஆண்டு சந்தா இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் பா.சுபாஷ் சந்திர போஸ், நாகை வடக்கு ஒன்றிய செயலாளர்  வி.வி.ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் பி.டி.பகு மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.