கும்பகோணம், செப்.22- அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனடி யாக துவங்க வேண்டும். வரவுக்கும். செல வுக்குமான வித்தியாசத் தொகையை வழங்கி தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி வாயிற்கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு சிஐடியு, ஏஐடியுசி, சிடிஎஸ்எஸ், எம்எல்எப் ஆகிய சங்கங்களின் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் (சிஐடியு) கும்பகோணம் மண்டல செயலாளர் கோ.மணிமாறன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி ஸ்தாபகத் தலைவர் ஆர்.மனோ கரன், சம்மேளன தலைவர் காரல் மார்க்ஸ், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் தில்லை வனம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் பேசினர்.