கட்டுநர் சங்கம் ஆர்ப்பாட்டம்
அரியலூர், பிப்.28- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு கட்டுமானப் பொருட்க ளின் விலைவாசி உயர்வை கண்டித்து அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சங்கத் தலைவரும், ராசி பில் டர்ஸ் உரிமையாளரு மான சிவகுமார் தலைமை வகித்தார். செய லாளர் மார்டீன் கண்டன உரையாற்றினார். இதில் சுமார் 150-க்கும் மேற் பட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரம்
மயிலாடுதுறை, பிப்.28 - மயிலாடுதுறை மாவட் டம், திருக்கடையூர் அருகேயுள்ள வளையல் சோழகன் கிராமத்தில் திமுக சார்பில் ‘இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்’ என்ற திண்ணைப் பிரச்சாரம் துவக்க விழா செவ்வாயன்று நடை பெற்றது. பூம்புகார் எம்.எல்.ஏ. வும், திமுக மாவட்டச் செயலாளருமான நிவேதா எம்.முருகன், டி.மணல் மேடு ஊராட்சிக்குட்பட்ட வளையல் சோழகன் கிராம மக்களைச் சந்தித்து வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி னார்.
புகார் மனு விழா
பொன்னமராவதி, பிப்.28 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி காவல் நிலையத்தில் கேடயம் பெட்டிசன் மேளா என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மனுக் கள் மீதான விசாரணை தொடங்கியது. பொன்னமராவதி காவல் ஆய்வாளர் பத்மா தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன் மனு தாரர் மற்றும் எதிர் மனு தாரர்களை அழைத்து விசாரணை செய்தனர். பாலியல் குற்றங்களி லிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்ற வழிமுறையையும், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை யும் ஏற்படுத்தினர்.
வங்கி சிறப்பு முகாம்
தஞ்சாவூர், பிப்.28 - கிராமங்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை நேரில் சென்று புதிய வங்கிக் கணக்கு துவங்க வும், நிலுவையில் உள்ள கடன்களை வசூல் செய்யும் வகையிலும், சென்ட்ரல் பேங்க் அப் இந்தியா சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கழனி வாசல் கிராமத்தில், சேமிப்பு கணக்கு, நடப் புக் கணக்கு துவங்கவும், நிலுவையில் உள்ள கடன் களை வசூல் செய்யவும், கடன் வழங்கவும், சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, வங்கி மேலாளர் ஆஷிஷ் பானர்ஜி தலைமை வகித் தார். இதில், கணக்கு துவங்கவும், கடன் பெற வும், பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங் கள் பெறப்பட்டன.
முற்றுகைப் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
புதுக்கோட்டை, பிப்.28 - சமவேலைக்கு சம ஊதி யம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் புதன்கிழமை புதுக்கோட்டையில் நடத்திய முற்றுகைப் போராட் டத்தில், 270 பெண் ஆசிரி யர்கள் உள்ளிட்ட 290 ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டனர். அரியலூர் அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் அலுவலகத்தை புதன் கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத் தைச் சேர்ந்த 110 பேர் உள்பட 146 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்துக்கு இயக்கத்தின் மாவட்டத் தலைவர் நடராசன் தலைமை வகித்தார்.
தூய்மைப் பணியில் ஈடுபட்ட அரசுக் கல்லூரி மாணவர்கள்
தூய்மைப் பணியில் ஈடுபட்ட அரசுக் கல்லூரி மாணவர்கள் அறந்தாங்கி, பிப்.28 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அழகு-2 மாணவர்களுக்கு, மணமேல்குடி ஊராட்சி பகுதி யில் 7 நாட்களாக சிறப்பு முகாம் நடைபெற்றது. திட்ட அலுவலர் முனைவர் எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமையில் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா நடேசன் முன்னிலை யில், ஒன்றியக் குழு துணைத் தலைவர் எஸ்.எம்.சீனியர் முகாமை துவக்கி வைத்தார். முகாமில், பல்வேறு தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். 6 ஆம் நாள் வடக்கு அம்மாபட்டினத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 250 பேர் பயன்பெற்ற னர். முகாமின் நிறைவு நாளான செவ்வாயன்று பத்தக்காடு அங்கன்வாடி மையம் செல்லும் பாதை சரி செய்யப்பட்டது.
பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக! மாணவர் சங்கம் ஆட்சியரிடம் புகார்
மயிலாடுதுறை, பிப்.28 - மயிலாடுதுறை மாவட்டம், மூவலூர் அரசுப் பள்ளியில் பயின்றுவரும் மாணவரை கொடூர மாக தாக்கிய சம்பவத்திற்கு கண்டனம் தெரி வித்ததோடு, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலு வலருக்கு புகார் மனு அளித்துள்ளது. மயிலாடுதுறை வட்டம் மூவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவர் உதயசாரதி. கடந்த 24.2.2024 அன்று பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் வரதராஜன் மற்றும் கலை வாணி, அருண்பாபு ஆகியோர் மாணவர் உதய சாரதியின் தேர்வெழுதும் அட்டையை பிடுங்கி உடைத்து இருக்கின்றனர். அப்போது மாணவர் “சார் என்னிடம் பரீட்சை அட்டை வாங்குவதற்கு காசு இல்லை; எனக்கு அட்டை வாங்கி தாங்க” என்று கேட்டதற்கு, ஆசிரி யர்கள் மாணவரை பிரம்பால் கண்மூடித்தன மாக தாக்கியுள்ளனர். இந்த மாணவருக்கு பெற்றோர் இல்லை என தெரிந்தும், அவரை யும், அவரது உடைமையையும் சேதப்படுத்தி யுள்ளனர். ஆசிரியர்கள் தாக்குதலில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவரை தாக்கிய ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகி யோரிடம் அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.
தரங்கம்பாடியில் வட்டாட்சியர் குடியிருப்பு திறப்பு விழா
தரங்கம்பாடியில் வட்டாட்சியர் குடியிருப்பு திறப்பு விழா மயிலாடுதுறை, பிப்.28 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் புதிய வட்டாட்சியர் குடியிருப்பு திறப்பு விழா நடைபெற்றது. இதனை காணொலி வாயிலாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாயன்று திறந்து வைத்தார். தரங்கம்பாடியில் வட்டாட்சியர் குடியிருப்பு பழுத டைந்து இருந்த நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ.40. 70 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய வட்டாட்சியர் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை காணொலி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து தரங்கம்பாடி வட்டாட்சியர் குடியிருப்பு நிலை யத்தில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் மணி மேகலை, சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.
சிபிஎம் போராட்டம் வெற்றி ஆடு வதைக் கூடம் பயன்பாட்டிற்கு வந்தது
திருவாரூர், பிப்.28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தால், குடவாச லில் உள்ள ஆடு வதைக் கூடம் பயன்பாட் டிற்கு வந்துள்ளது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூ ராட்சியில் 18 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் (இறைச்சி மார்க்கெட்) ஆடு வதைக் கூடம் உள்ளது. ஆனால், இந்த கடைகள் மற்றும் ஆடு அடிக்கும் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், பொது மக்கள் பயன் பாட்டுக்கு வரவில்லை. இவற்றை பயன் பாட்டுக்கு கொண்டு வரக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்து, போராட்டமும் நடைபெற்றது. மேலும் குடவாசல் ஒகை பகுதியில் இருந்து அத்திக்கடை வரை பல இடங் களில், மீன் கடைகள் மற்றும் ஆட்டு இறைச்சி கடைகள் சாலை ஓரத்தில் ஆங் காங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆடுகளை சாலை ஓரத்திலேயே வைத்து அறுக்கும் போது, அவ்வழியாக செல்லும் பொது மக்களும், மாணவர்களும் அருவருப்பாக பார்த்துச் சென்ற நிலை இருந்தது. சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை செய்யவும், சாலை ஓரங்களில் உள்ள அனைத்து கடைகளையும் இறைச்சி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லவும் பேரூ ராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார ஆய்வாளர் ஆடு களை ஆய்வு செய்த பின்னரே, இறைச்சி கள் விற்கப்பட வேண்டும். ஆடு வதைக் கூடத்தை சீர்செய்து பயன்பாட்டுக் கொண்டு வரவேண்டும் என சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கடந்த ஜனவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து செய்தி தீக்க திர் நாளிதழில் வெளிவந்தது. இதனையொட்டி பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி முருகேசன், துணைத் தலை வர் குணசேகரன், செயல் அலுவலர் பர மேஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர்களின் தொடர் முயற்சியால் ஆடு வதைக் கூடம் சீர்செய்யப்பட்டது. மேலும், கால் நடை மருத்துவர் மற்றும் சுகாதார ஆய்வா ளர் முன்னிலையில் ஆடுகளை ஆய்வு செய்து, அறுக்கும் முறை புதன்கிழமை யில் (பிப்.28) இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. பின்பு, சாலை ஓரங்களில் உள்ள இறைச்சிக் கடைகளை உணவு பாது காப்பு அலுவலர் மகேஷ் ஆய்வு செய் தார். சாலை ஓரங்களில் இறைச்சி கடை வைத்துள்ள வியாபாரிகளிடம், பேரூ ராட்சி வணிக வளாகத்தில் இறைச்சிக் கடை களை அமைத்துக் கொள்ள வேண்டும் என நோட்டீஸ் வழங்கியும், ஒலிப்பெருக்கி அறி விப்பு மூலமும் பேரூராட்சியின் நிர்வாகம் சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது மக்கள் மத்தியில் மிகுந்த வர வேற்பை பெற்றுள்ளது. இந்நடவடிக்கை குறித்து அறிந்த சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி, “பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆடு வதைக் கூடம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் மருத்துவர் முன்னிலையில் கண்காணித்து ஆடுகளை ஆய்வு செய்து சுகாதாரமான முறையில் இறைச்சிகள் விற்பனை செய் வதை உறுதிப்படுத்த வேண்டும். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஊழியர்க ளின் செயல் பாராட்டுக்குரியது” என்றார்.
முக்குளம், சாத்தனூர் கிராம மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது ஆட்சியர் சாருஸ்ரீ தகவல்
திருவாரூர், பிப்.28 - தமிழக அரசின் நடவடிக்கையால் கருவாக்குறிச்சி நிலக்குடியேற்ற சங்கம் மற்றும் தளிக்கோட்டை நிலக்குடி யேற்ற கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட முக்குளம், சாத்த னூர் கிராமத்தைச் சேர்ந்த 537 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் முக்குளம், சாத்தனூர், கருவாக்குறிச்சி காலனி, தளிக்கோட்டை காலனி ஆகிய மூன்று கிராமங்களில் சுமார் 750-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவின் பேரில், 165 ஏக்கர் நஞ்சை நிலங்கள், குடும்பம் ஒன்றுக்கு தலா ஒன்றரை ஏக்கர் வீதம் 114 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதில் பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. விடுபட்ட குடும்பங்களுக்கு 2006-2011-இல் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அப்போதும் பல்வேறு காரணங்களால் தடைபட்டது. இந்நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையால், கருவாக்குறிச்சி நிலக்குடியேற்ற சங்கம் மற்றும் தளிக் கோட்டை நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்கங்களுக்கு உட்பட்ட முக்குளம், சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 537 பயனாளிகளுக்கு 281 ஏக்கரும், கருவாக்குறிச்சி கிரா மத்தைச் சேர்ந்த 57 பயனாளிகளுக்கு 26 ஏக்கரும், தளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 110 பயனாளி களுக்கு 73 ஏக்கரும் என 704 பயனாளிகளுக்கு, 380 ஏக்கர் நில ஒப்படை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார். '
பள்ளி, கல்லூரிகளில் தேசிய அறிவியல் தின விழா
தஞ்சாவூர், பிப்.28- சர் சி.வி.ராமன் கண்டுபிடித்து வெளியிட்ட ராமன் விளைவு, உலகிற்கு அறிவிக்கப்பட்ட நாள் பிப்ரவரி 28. இந்நாள் தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி குமரப்பா பள்ளி யில் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள்-தாளாளர்கள் சங்க நிறு வனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித் தார். பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின் கணபதி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மூர்த்தி வரவேற் றார். வானவில் மன்றம் மற்றும் அறிவியல் மன்றம் இணைந்து பல்வேறு அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்தின. இதில் மாணவர்களது படைப்புகளான வானம் நீல நிறம் ஏன், நீரூற்று, மின் ஆற்றல் இயக்க ஆற்றலை மாறுதல், ஒளிரும் விளக்கு போன்ற படைப்புகள் காட்சிப்படுத்தப் பட்டன. மேலும், மாணவர்களின் படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. அறங்காவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் பிரியங்கா நன்றி கூறினார். மருதுபாண்டியர் கல்லூரி தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி அறிவியல் புலம் சார்பாக, ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அண்மைக்கால போக்குகள்’ என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா, துணை முதல்வர் இரா.தங்க ராசு முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அவி நாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பி யல் துறைத் தலைவர் ஏ.பாலமுருகன் பங்கேற்றார்.
வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
புதுக்கோட்டை, பிப்.28- புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றி யப் பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணி களை, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் ஆய்வு செய்தார். நெய்வாசல் ஊராட்சியில், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.71.9 லட்சம் மதிப்பீட்டில், மஞ்சினிப்பட்டி சுந்தரக்கருப்பர் கோவில் தார்ச்சாலை பணி மற்றும் சேதுராபட்டி ஊராட்சியில் ரூ.34.41 லட்சம் மதிப்பீட்டில் திருநாடன்பட்டி சாலை பணி களை, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேசிய அறிவியல் தினம் அரசு கல்லூரியில் பயிற்சி பட்டறை
அறந்தாங்கி, பிப்.28- தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அரசு கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் பயிற்சி பட்டறை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை சார்பாக பயிற்சி பட்டறை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வி.பாலமுருகன் தலைமையேற்று துவக்கி வைத்துப் பேசினார். இயற்பியல் துறை தலைவர் முனைவர் அ.டேவிட்கலைமணி ராஜ் தொடக்க உரையாற்றினார். திருச்சி லட்சுமி எலக்ட்ரானிக்ஸ் நிர்வாகப் பயிற்சியாளர்கள் வி.சத்தியசீலன், எம்.கலைச்செல்வி, ஜீ.பூபதி ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர். மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இயற்பியல் துறை மற்றும் அனைத்துத் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.