districts

img

மாநில அளவிலான நீச்சல் போட்டி ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி மாணவி சாதனை

புதுக்கோட்டை, டிச.14 - மதுரையில் நடைபெற்ற மாநில அளவி லான நீச்சல் போட்டியில் புதுக்கோட்டை திருக் கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு அக்வாட்டிக் அசோசியேசன் மாநில அளவிலான நீச்சல் போட்டியை அண்மையில் மதுரையில் நடத்தியது. இப் போட்டியில் புதுக்கோட்டை திருக்கோகர் ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி 5-ஆம் வகுப்பு மாணவி தேவிகா கலந்துகொண்டார். போட்டியில் மாணவி தேவிகா 25மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவி தேவிகாவை, பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி, புதன் கிழமை புத்தகங்களைப் பரிசாக வழங்கி வாழ்த்தினார்.