districts

img

ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பேராவூரணி, ஏப்.26 -  

   பேராவூரணி முடப்புளிக்காடு கிராமத்தில் ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

   தொடர்ந்து 12 நாட்கள் வண்ணமயில் வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம் என பல்வேறு வாக னங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. திருவிழா வில் முக்கிய நிகழ்வான மே-4-ஆம் தேதி அதிகாலை  4 மணி முதல் பால்காவடி, பன்னீர்காவடி, அக்னி  காவடி, தொட்டில் காவடி, பறவை காவடி என  பல்வேறு காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்து  தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.  அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடை பெறுகிறது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வா னையுடன் முருகன் தேரில் எழுந்தருளவுள்ளார். தொடர்ந்து 10-ஆம் திருவிழாவாக தீர்த்தவாரியும், 11-ஆம் திருவிழாவாக திருக்கல்யாணமும் இரவு தெப்ப உற்சவமும், 12-ஆம் திருவிழாவாக விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது.

   திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், முடப்புளிக்காடு கிரா மத்தார்கள், பரம்பரை அறங்காவலர்கள், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள் மற்றும் திருக்கோவில் பணி யாளர்கள் செய்திருந்தனர். கொடியேற்று நிகழ்ச்சி யில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.