திருச்சிராப்பள்ளி, ஏப்.7- கேர் பொறியியல் கல்லூரியில் 13 ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கேர் கல்வி குழும தலைமை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த், கேர் பொறியியல் கல்லூரி அனைத்து டீன்கள் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் தலைமை வகித்தனர். இந்திய கபடி வீரர் பிரபஞ்சன், கொடியேற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றி விளையாட்டு போட்டிகள் துவங்கின. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கேர் இன்ஜினியரிங் காலேஜ் குழும முதல்வர் சாந்தி நன்றி கூறினார். பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.